தடாகம் சாலையில் புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்பட வேண்டும் எனவும், மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தடாகம் சாலையில் உள்ள காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் தனியார் பங்களிப்புடன் சுமார் 6 லட்சம் செலவில் புதிய சோதனைச் சாவடி கட்டப்பட்டது.

இதில் நம்பர் பிளேட் எண்களை துல்லியமாக பதிவு செய்யும் சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணன் குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்படு வேண்டும். மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...