கோவையில் சாலை வசதி வேண்டி வருடக்கணக்கில் காத்திருக்கும் 21வது வார்டு பகுதி மக்கள்

தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஸ்கீம் ரோடு மூலமாக கான்க்ரீட் சாலையாக உள்ள சாலைகளை தார் சாலைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கூறியதாக கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சரவணம்பட்டி கிராமம், விநாயகபுரம் வார்டு எண்.21 கீழ் உள்ள பாரதியார் வீதி, சிவதங்கம் நகர், அபிராமி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீதிகளில் பல்வேறு திட்டங்களுக்கு தோண்டப்பட்ட குழிகள், மழையினால் சேதமடைந்து பல காலமாக அப்படியே உள்ளது. குறிப்பாக பாரதியார் வீதியில் சாலை பராமரிப்பின்றி மிகவும் சேதம் அடைந்துள்ளது. இது கடந்த 15 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் 21 ஆம் வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரத்திடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர் இதுபற்றி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் தொடர்ந்து சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி வேண்டி கேட்டுக்கொண்டார்.



இந்நிலையில், இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.21க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். சாலை செப்பனிடுதல் பற்றி ஆணையர் தெரிவித்தது என்ன என்பது குறித்து கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரத்திடம் கேட்கையில், அவர் கூறியதாவது, ஆணையர் இன்று ஆய்வு செய்துவிட்டு, முதற்கட்டமாக இந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரவுள்ள தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஸ்கீம் ரோடு மூலமாக கான்க்ரீட் சாலையாக உள்ள இந்த சாலைகளை தார் சாலைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...