தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சியில் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.


கோவை: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் பதிப்புரிமைப் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் பல்கலைக்கழக அண்ணா அரங்கில் முதுநிலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

19.02.2024 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்ற தொடக்கவிழாவில், முதுநிலை மாணவர்கள், காப்புரிமைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.நடராஜன் வரவேற்பு உரையாற்றினார். முதுநிலை கல்வித் துறை தலைவர் முனைவர் என்.செந்தில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.



பிமி, காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணைக்கட்டுப்பாட்டாளர் சென்னை, தனது உரையில், மாணவர்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கு இலவச இணையதளம் பயன்படுத்துவது மற்றும் கண்டுபிடிப்பு படிவத்தை எவ்வாறு சரியாக தயாரிப்பது என்பதை அவர்களுக்கு விளக்கினார்.

வெ. கிரிஜா, காப்புரிமை வழக்கறிஞர் மற்றும் IPaatEntiti IP இன் நிறுவனர், தன் உரையில் இந்தியாவில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளின் அம்சங்களை விளக்கி, பல்வேறு வகையான உரிமைகளை பற்றி மாணவர்களின் மத்தியில் உரையாற்றினார்.

முனைவர் வெ. கீதாலட்சுமி துணைவேந்தர், மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார். இணைப் பேராசிரியர் முனைவர் கணேசன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...