கோவையில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளா் குப்பமுத்துவை, மாநகரக் காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்திற்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


கோவை: கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் குப்பமுத்து. இவா் நேற்று முன்தினம் (பிப்.18) இரவு பணி முடிந்து காந்திபுரத்தில் உள்ள காவலா் குடியிருப்பு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வி.கே.கே. மேனன் சாலையில் சென்றபோது, அந்த சாலையில் ஒருவா் பெண்ணிடம் நகையைப் பறித்து கொண்டு தப்பினார். அவா் நகைப் பறித்து தப்பியதை பார்த்த அதே பகுதியைச் சோ்ந்த வசந்தகுமார், என்பவா், அவ்வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குப்பமுத்துவிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் சோ்ந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபரைத் தேடினா். அப்போது, பாரதியார் சாலையில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பதுங்கியிருந்த நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைப் பிடித்தனா்.

விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டவா் உடையாம்பாளையத்தைச் சோ்ந்த பிரதீப்குமார் (22) என்பது தெரிய வந்தது. மேலும், இவா் ரத்தினபுரியில் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு விட்டு, வி.கே.கே.மேனன் சாலையில் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை காட்டூா் போலீஸில் ஒப்படைத்தனா்.

அந்த நபா் மீது ஏற்கெனவே நகைப் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளா் குப்பமுத்துவை, மாநகரக் காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.19) தனது அலுவலகத்திற்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...