கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் எனும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


கோவை: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இதில் கோவைக்கென சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அவை, கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளிருக்கான ' தோழி விடுதிகள்' எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கோவை, மதுரை மற்றும் சென்னையில், 1000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கான ஆறு மாத உறைவிட பயிற்சி வழங்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முதன்மை நதியான நொய்யலை புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் சென்னை, மதுரை போலவே மாபெரும் நூலகம், கலைஞர் பெயரில் அமைக்கப்படும். கோவையில் 1000 இடங்களில் இலவச wifi-hotspot வசதிகள் கொண்டுவரப்படும். கோவை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் பணிகள் துவங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...