வால்பாறையில் 1500 பேர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விண்ணப்பம் அளித்த மூன்றாயிரம் பேரில், சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 1500 பேருக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் முகாம் வால்பாறை பகுதியில் நடைபெற்றது. முகாமில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் வேண்டி விண்ணப்பம் செய்தனர். அதனை ஏற்று சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

மேலும் இலவச தையல் எந்திரம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை, தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, பழங்குடியினர் சான்றிதழ், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, நத்தம் சிட்டா நகல்,பட்டா உறுதிச் சான்று, ஒருங்கிணைந்த சான்று, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு பெயர் மாற்றம் சான்றிதழ் போன்றவை 1163 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

சுமார் 84 கோடியே 81 லட்சத்து 60,000 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம் பள்ளி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் வட்டாட்சியர் வாசுதேவன் வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...