பொள்ளாச்சியில் புனரமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்தார் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் என்று நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக ஒரு கோடியை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மின்மேட்டர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று பணியில் முடிவுற்றது சுத்திகரிப்பு நிலையத்தை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கமிஷனர் சுப்பையா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர மன்ற தலைவர், கடந்த 10 ஆண்டுகளில் பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.



இதனால் குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சூழல் நிலவியது. திமுக அரசு பொறுப்பேற்றுடன் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் மோட்டார்கள் வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...