பொள்ளாச்சியில் புனரமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்தார் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் என்று நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக ஒரு கோடியை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மின்மேட்டர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று பணியில் முடிவுற்றது சுத்திகரிப்பு நிலையத்தை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கமிஷனர் சுப்பையா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர மன்ற தலைவர், கடந்த 10 ஆண்டுகளில் பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.



இதனால் குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சூழல் நிலவியது. திமுக அரசு பொறுப்பேற்றுடன் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் மோட்டார்கள் வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...