உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கல்பனா சாலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. மாவட்ட, மாநில, ஊரக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் மைதானத்திற்கு பயிற்சிக்கு வருகின்றனர்.



அவர்களுடன் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மைதானத்தில் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷஜந்துக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்பு மைதானத்தில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை. இதனால் பார்த்தீனியம் செடிகள் நீண்டு வளர்ந்து விதைகளை தூவி இனத்தை பல்கி பெருக்கி மைதானத்தை ஆக்கிரமித்து வருகிறது.



செடிகள் வெளியிடும் மகரந்தம் மற்றும் விதைகள் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை கொண்டதுடன், உடல் மீது படும் போது ஒருவிதமான அரிப்பு மற்றும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது. இது குறித்து பள்ளி நிர்வாகமும் கவனிப்பதில்லை. இதனால் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, உடற்பயிற்சி மேற்கொள்ள வருகின்ற பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் செடிகளை கடந்து செல்கையில் உடல் நலக்கோளாறால் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.

மைதான பராமரிப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட எதிர்கால விளையாட்டு வீரர்களை உருவாவதை சமுதாயம் இழக்க நேரிடும். எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...