பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளான மாங்கரை, சின்னத்தடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேய்தப்படுத்திச் செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...