கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல்

மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காலி உடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடவும், அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையிலும் இந்த பிரத்தியேக ஊஞ்சல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கோவை: சமத்துவமும் சந்தோசமும் இச்சமுதாயதில் அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல் ஒன்றை கோயம்புத்தூர் ரேஸ் கோர்சில் அமைத்துள்ளனர்.



இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காளியுடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடலாம். அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையில் இந்த பிரத்தியேக ஊஞ்சலை வடிவமைத்து உள்ளனர்.

"நாம் சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் ஒருங்கிணைத்து வாழ, இந்த விசேஷமான ஊஞ்சல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று ரோடரக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் பிரேசிடென்ட் நந்தினி ராஜா தெரிவித்தார்.

"மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளை போலவே இயல்பாக நடமாட இந்த ஊஞ்சல் நம் சமுதாயத்தில் ஒரு முதற்படியாக அமையும். இந்த அழகான முயற்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என ரோடராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் செயலாளர் தீனதயாளன் கூறினார்.

ரேஸ் கோர்ஸ், இன்டிகோ டீ ஹவுஸ் எதிரில் நடந்த இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் பொது மேலாளர் பாஸ்கர் சீனிவாசன் கலந்துகொண்டு இந்த பிரத்தியக ஊஞ்சலை திறந்து வைத்தார்.



இந்த திருவிழாவில் ரோடராக்ட உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...