கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல்

மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காலி உடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடவும், அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையிலும் இந்த பிரத்தியேக ஊஞ்சல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கோவை: சமத்துவமும் சந்தோசமும் இச்சமுதாயதில் அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல் ஒன்றை கோயம்புத்தூர் ரேஸ் கோர்சில் அமைத்துள்ளனர்.



இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காளியுடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடலாம். அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையில் இந்த பிரத்தியேக ஊஞ்சலை வடிவமைத்து உள்ளனர்.

"நாம் சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் ஒருங்கிணைத்து வாழ, இந்த விசேஷமான ஊஞ்சல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று ரோடரக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் பிரேசிடென்ட் நந்தினி ராஜா தெரிவித்தார்.

"மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளை போலவே இயல்பாக நடமாட இந்த ஊஞ்சல் நம் சமுதாயத்தில் ஒரு முதற்படியாக அமையும். இந்த அழகான முயற்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என ரோடராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் செயலாளர் தீனதயாளன் கூறினார்.

ரேஸ் கோர்ஸ், இன்டிகோ டீ ஹவுஸ் எதிரில் நடந்த இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் பொது மேலாளர் பாஸ்கர் சீனிவாசன் கலந்துகொண்டு இந்த பிரத்தியக ஊஞ்சலை திறந்து வைத்தார்.



இந்த திருவிழாவில் ரோடராக்ட உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...