வால்பாறையில் ஐந்து இடங்களில் அதிமுக கட்சியினர் தெரு முனை பிரச்சாரம்

தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை எடுத்துக்கூறி அதிமுகவினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முன்னிலையில், நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் வால்பாறை, ரொட்டிக்கடை கருமலை, முடீஸ், சோலையார் அணை, ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு, சிறு குறு நடுத்தர புதிதாக பீக்ஹவர், நிலை கட்டணம் உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு, போன்றவைகளால் மக்கள் அதிக சிரமப்படுகின்றனர் என்று அதிமுக கட்சியினர் மக்களிடம் தெருமுனை பிரசாரத்தில் பேசினார்.



இது காலையிலிருந்து மாலை வரை இந்த ஐந்து இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக பேச்சாளர் புரட்சி தம்பி மற்றும் பி.லட்சுமி காந்த், நகரச் செயலாளர் மயில் கணேசன், தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வி.அமீது, நகரத் துணைச் செயலாளர் பொன். கணேஷ் சலாவுதீன், ஆடிட்டர் சண்முகவேல், எம்.ஆர்.எஸ்.மோகன் சசி, ஐடிவிங் சண்முகம், அரசப்பன் ரொட்டிக்கடை பாபு, ரொட்டிக்கடை ரமேஷ், மஞ்சு பழனிச்சாமி, சீனி ராஜ், லோகேஸ்வரன், பழனியப்பன், ஜான் பீட்டர், விமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...