அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்கிறது - கோவை புதூரில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேட்டி

அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற வேண்டுமென அமைச்சர் செந்தில் பாலாஜியை வேண்டுமென்றே சிறையில் வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.


கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக விளையாட்டு அணி சார்பில் பரிசளிப்பு விழா கோவை புதூர் பகுதியில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராவ பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளையும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் மிகச்சிறப்பாக செய்வார். அவருடைய சிஷ்யனான கோவை வடக்கு மாவட்ட தலைவர் ரவி அதே அளவிற்கு விழாவை சிறப்பாக செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை வேண்டுமென்றே சிறையில் வைத்துள்ளனர். அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற வேண்டுமென சிறையில் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி குறை சொல்லவில்லை.

இதுநாள் வரைக்கும் பாஜகவுடன் தான் கூட்டணியில் இருந்தீங்க, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் வாயை திறந்துள்ளீர்களா? ஒரு கேள்வி கேட்டுள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார். ஆனால் பொள்ளாச்சி எம்.பி 240 கேள்விகளை கேட்டுள்ளார். திமுக பாராளுமன்றத்தில் சென்றவுடன் தலைகீழாக உள்ளது. அந்த அளவிற்கு கேள்விகளை தமிழ்நாட்டிற்கு கேட்டுள்ளோம்.

உலக முதலீட்டார்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். உதயநிதி விளையாட்டு துறை அமைச்சர் ஆனவுடன் உலகரங்கில் நடைபெறும் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தினார். செஸ், கேலோ இந்தியா போட்டிகள் மாவட்டம் வாரியாக நடத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு பதக்க பட்டியலில் இந்திய அளவில் 2வது இடத்திற்கு வந்துள்ளது. நாம் அனைவரும் சமம், நாம் யாருக்கும் எதிரி இல்லை. பிறப்பால் அனைவரும் சமம்.

பாஜக கடந்த 10 ஆண்டுகளில் மதவெறி அரசியலை கையாண்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மதவெறி கலச்சாரம் நடக்காது. .நாம் கட்டும் வரி பணத்தை நமக்கு முழுமையாக ஒன்றிய அரசு கொடுப்பது இல்லை.

பால், வெண்ணை என எது வாங்கினாலும் வரி கட்டனும் , நாம் ஒரு ருபாய் கொடுத்தால் 29 பைசா தான் மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால் உ.பி மாநிலம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 17 பைசா கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் பாஜக. அதற்கு துணை போனவர்கள் அதிமுக. செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள்.

கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும் எடப்பாடி பழனிசாமி மீதும் எஸ்.பி.வேலுமணி மீதும் ஏன் இன்னும் வருமானவரி, அமலாக்கதுறை சோதனை செய்ய வில்லை.அவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம். நீங்களும் அப்படியே நடியுங்கள் என இரு கட்சிகளிடையே ரகசிய உறவை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...