காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் My V3 Ads நிறுவன உரிமையாளர் கோவையில் கைது

புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் My V3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட அவரது ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று (பிப்.10) சத்தி ஆனந்த் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.



அப்போது சத்தி ஆனந்த் கூறுகையில், ''மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாகவும், தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன்.'' என்றார்.



தொடர்ந்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் சக்தி ஆனந்த் உட்பட அவரது ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...