மதுக்கரை அறிவொளி நகரில் நகைகளுக்கு அட்டை பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில், கம்பெனிக்குள் திடீரென தீ பற்றி உள்ளது. இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.


கோவை: கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகைகளுக்கு அட்டை பெட்டி தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில் கம்பெனிக்குள் தீ பற்றி உள்ளது.



இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



உடனடியாக கோவைப்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



மின் கசிவால் தீ பற்றியதாக கூறப்படும் நிலையில், உரிய விசாரணைக்குப் பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். இந்த கம்பெனியை சுற்றி வேறு சில கம்பெனிகளும் இருப்பதால் அவர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.



இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த வண்ணம் உள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...