கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் போலீசார் விழிப்புணர்வு

ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை பற்றியும், கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.


கோவை: பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் மாநகர காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி கோவை ரயில் நிலையத்தில் இன்று (பிப்.8) நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகர காவல்துறையினர், ரயில்வே காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை பற்றியும், கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் அங்கிருந்த வடமாநில மக்களிடமும் ஹிந்தி மொழியில் உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



பின்னர் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள், குழந்தைகளின் உரிமைகள், குழந்தை தத்தெடுத்தல் விவரங்கள், குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்கள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...