வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி- கவுண்டம்பாளையம் விஏஒ மீது கோவை ஆட்சியரிடம் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் விஏஒ வாக இருந்த போது லோகநாயகி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக திருவாடானை பகுதியை சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் விஏஒ வாக இருப்பவர் லோகநாயகி. இவர் இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை பகுதியில் விஏஒ வாக இருந்த போது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக திருவாடானை பகுதியை சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், 2021ம் ஆண்டு லோகநாயகி ராமநாதபுரம் மாவட்டத்தில் விஏஒ வாக இருந்த போது அவரும் அவரது மகன் எழில் பிரபாகரனும் சேர்ந்து, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு தற்போது வரை வேலைக்கும் அனுப்பாமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக கூறினார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அவர்கள் திடீரென கிளம்பி கோவைக்கு வந்து விட்டதால் பல நாட்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் ஒருவழியாக லோகநாயகி கோவையில் பணிபுரிவதை தெரிந்து கொண்டு இங்கு வந்ததாகவும் அவரிடம் தான் கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் தர மறுத்ததாக கூறினார்.

பின்னர் இது பற்றி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் ஆனால் கவுண்டம்பாளையம் போலிசார் லோகநாயகி விஏஒ வாக இருப்பதால் இது குறித்து தாங்கள் விசாரணை நடத்த முடியாது என கூறி விட்டதாக தெரிவித்தார்.

3 வருடங்களுக்கும் மேலாக தனது பணத்தை பெறுவதற்கு போராடி வருவதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியராவது விஏஒ லோகநாயகியிடம் இருந்து தனது பணத்தை பெற்று தந்து அவர் மீதும் அவரது மகன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...