நாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் யுவபாரதி பள்ளி அணி வெற்றி

YELLOW TRAIN பள்ளி மற்றும் YUVA BHARATHI பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் 7-6 என்ற கோல் கணக்கில் யுவபாரதி பள்ளி வெற்றி கோப்பையை வென்றது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற 7A SIDE கால்பந்து போட்டியில் 7-6 என்ற கோல் கணக்கில் யுவபாரதி பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே 7A SIDE கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கோவையைச் சேர்ந்த 14 பள்ளிகளைச் சேர்ந்த கால்பந்து அணியினர் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு கலந்து கொண்டு பேசும்போது, அனைவரும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து மாணவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கால்பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைத்தார். யுவா பப்ளிக் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் பள்ளியின் அறங்காவலர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவில் பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், 14 அணிகள் கலந்து கொண்ட நிலையில் சரவணம்பட்டி VIVEKAM CBSE பள்ளி, அரசூர் YELLOW TRAIN பள்ளி, நாயக்கன்பாளையம் YUVA PUBLIC பள்ளி, வடவள்ளி YUVA BHARATHI பள்ளி ஆகிய பள்ளி அணிகள் அரையிறுதி சுற்றிற்கு தகுதி பெற்றனர்.

இதில் VIVEKAM CBSE பள்ளி மற்றும் YELLOW TRAIN பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 5-4 என்ற கோல்கணக்கில் YELLOW TRAIN பள்ளி அணி வெற்றிபெற்றது. YUVA PUBLIC பள்ளி மற்றும் YUVA BHARATHI பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் YUVA BHARATHI பள்ளி அணி வெற்றி பெற்றது. YELLOW TRAIN பள்ளி மற்றும் YUVA BHARATHI பள்ளி அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிச்சுற்றில் 7-6 என்ற கோல் கணக்கில் யுவபாரதி பள்ளி வெற்றி கோப்பையை வென்றது.



இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் அறிவரசு இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த YUVA BHARATHI பள்ளி அணி, இரண்டாம் இடத்தைப் பிடித்த YELLOW TRAIN பள்ளி அணி, மூன்றாம் இடம் பிடித்த VIVEKAM CBSE பள்ளி அணி மற்றும் 4ம் இடம் பிடித்த YUVA PUBLIC பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...