போதைப் பொருள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி அங்கலக்குறிச்சியில் மாரத்தான் போட்டி

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் விக்னேஸ்வரா தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.



போட்டியை ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



இன்றைய காலகட்டத்தில் போதை பழக்கபழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீள வேண்டும், மாணவ மாணவிகள் செல்போனில் மூழ்கிக் கிடப்பதால் ஞாபகத்திறன் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் தவறாக வரும் பதிவுகளை பார்ப்பதனால் தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது. இதை மாணவ மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...