பொள்ளாச்சியில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது

பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கடன் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சென்ற இரண்டு பெண்களிடம் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.



அப்போது சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த சபரிகிரி(41) என்வர் நகை பறிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து தற்போது தனிப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



இதையடுத்து தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சபரிகிரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடன் அதிகமாக இருந்ததால் இதுபோன்ற நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...