பொள்ளாச்சியில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது

பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கடன் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சென்ற இரண்டு பெண்களிடம் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.



அப்போது சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த சபரிகிரி(41) என்வர் நகை பறிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து தற்போது தனிப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



இதையடுத்து தலைமை காவலர் சபரிகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சபரிகிரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடன் அதிகமாக இருந்ததால் இதுபோன்ற நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...