நடிகர் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பு – கோவையில் பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாட்டம்

கணபதி சக்தி சாலையில் உள்ள கோவை வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு, வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நிர்வாகிகள் பூஜை செய்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மேளம் தாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


கோவை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் விஜய் இன்று கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை கணபதி சக்தி சாலையில் உள்ள கோவை வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு, வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நிர்வாகிகள் பூஜை செய்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மேளம் தாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார், இனிமேல் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டுவதாகவும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.



ஏற்கனவே விஜய் மக்கள் மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும், இனிமேல் அதனை அதிகப்படுத்தி பெரிய அளவில் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நலத்திட்டங்கள் செய்யப் போவதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே பொதுமக்களுக்கு தினமும் 100 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவதாகவும், அந்தத் திட்டத்தை மேலும் தொடர்ந்து அதிகளவில் உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக சம்பத் குமார் கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...