குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த முதல்வருக்கு கு.இராமகிருட்டிணன் நன்றி

தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை தந்தை பெரியார் திராவிட கழகம் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.


கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளாவது, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், திபெத், போன்ற வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக நிறைவேற்றும் சட்டம் அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும், இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று புதிய குடியுரிமை திருத்த சட்டம் சொல்கிறது.

இலங்கைக்கு சென்று ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் வீடு கட்டித் தருகிறோம், சாலை அமைத்து தருகிறோம், அவர்களுக்கு புனரமைப்பு பணிகளை செய்து தருகிறோம் என்று நாடகம் நடத்தும் மோடியின் பாஜக அரசு அதே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை இல்லை என்று அறிவிக்கின்றது.

கிறிஸ்துவ நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்லும் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவ நாடுகளில் குடியேறிய பிழைப்புக்காக சென்ற பார்ப்பனர்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகவும், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் கிறிஸ்தவ நாடுகள் அனுமதித்திருக்கிறது. ஆனால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...