காங்கேயம் நகர்மன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக மூன்று நிறுவனங்களிடம் இருந்து நிலவேம்பு குடிநீர் வழங்கிட விலைப்புள்ளி கோரப்பட்டதில் குறைவான விலைப் புள்ளியினை ஏற்று விநியோக உத்தரவு வழங்க அனுமதி கோரி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: காங்கேயம் நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூட்டத்தில் காங்கேயம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலவேணி, நகராட்சி ஆணையர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கேயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக மூன்று நிறுவனங்களிடம் இருந்து நிலவேம்பு குடிநீர் வழங்கிட விலைப்புள்ளி கோரப்பட்டதில் குறைவான விலைப் புள்ளியினை ஏற்று விநியோக உத்தரவு வழங்க அனுமதி, நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் குத்தகை உரிமத்தினை புது ஏல ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டத்தில் வரப்பெற்ற ஒப்பந்த புள்ளிகளை ஒப்பிட்டு கூடுதலாக இருக்கும் ஒப்பந்த புள்ளியினை ஏற்று குத்தகைக்கு விட அனுமதி, குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள செடி, கொடி, முட்புதர்களில் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிக்காக ஆகும் செலவு தொகையினை பொது நிதியிலிருந்து மேற்கொள்ள மன்றத்தின் அனுமதி, தூய்மை இந்தியா திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கில் குப்பைகளை அரைக்கும் இயந்திரம் பழுதடைந்த நிலையில் பழுது பார்க்கும் செலவிற்கு மன்றத்தின் அனுமதி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் பணிக்கு ஆகும் செலவு தொகைக்கான மன்றத்தின் அனுமதி உட்பட சுமார் 47 கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் அனைத்தும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணி குறித்தும், குடிநீர் குழாய்கள் உடைப்பு மற்றும் சரிசெய்வது குறித்தும், சிவன்மலை ஊராட்சி, பொத்தியம்பாளையம் ஊராட்சி மற்றும் ஆலம்பாடி ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து எல்லை விரிவாக்கம் செய்வது குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும், வருவாய் அதிகரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காங்கேயம் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் காங்கேயம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...