சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தாராபுரத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

பயணத்தின்போது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்தாமல் இருக் வேண்டும், போக்குவரத்து சிக்னலை கவனித்து வாகனத்தை இயக்க வேண்டும் என்பன குறித்து பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

'சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு' என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.



இதில் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கரூர் சாலை, அலங்கியம் சிக்னல், உடுமலை ரவுண்டானா, பேருந்து நிலையம், அமராவதி ரவுண்டானா, புறவழிச் சாலை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதில், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது, போக்குவரத்து சிக்னலை கவனித்து வாகனத்தை இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முன்னதாக சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் குற்றவியல் நடுவர் பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மூலனூர் தாராபுரம் காவல் ஆய்வாளர் அருள், தாராபுரம் காவல் ஊதவி ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...