தாராபுரத்தில் காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் அண்ணா சிலை முன்பு காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை திமுகவினர் நடத்தினர்.



உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மதங்களை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு முன்னதாக காந்தியடிகளுக்கு மூன்று நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் காங்கிரஸ், திராவிட கழகத்தினர், திமுகவினர், மனிதநேய மக்கள் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...