தாராபுரத்தில் காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் அண்ணா சிலை முன்பு காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை திமுகவினர் நடத்தினர்.



உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மதங்களை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு முன்னதாக காந்தியடிகளுக்கு மூன்று நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் காங்கிரஸ், திராவிட கழகத்தினர், திமுகவினர், மனிதநேய மக்கள் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...