வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா

தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம் நேற்று( ஜனவரி 29ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 5 நாட்கள் நடைபெறும் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா நடைபெற்றது.



விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் ப.கருப்புசாமி அனைவரையும் வரவேற்றார். முதல்வர் முனைவர் N.R.அலமேலு தலைமை தாங்கி பேசினார். ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் பேராசிரியர். டி.ஜி. சீத்தாராம், ஏஐசிடிஇ தலைமையகம், புது தில்லியில் இருந்து மெய்நிகர் முறையில் துவக்கி வைக்கப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு (எம்ஐசி) ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் “புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் (ஐடிஇ) பூட்கேம்ப்களை (முகாம் - இரண்டாவது கட்டம் ) இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் பத்து மையங்களில் தொடங்குகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம் நேற்று ( ஜனவரி 29ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு விருந்தினராக வோல்வோ குழுமத்தின் புதுமை கண்டுபிடிப்புகளின் ஆலோசகர் அர்ஜுன் மற்றும் கௌரவ விருந்தினராக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்பு துறை நிர்வாக ஆசிரியர், விகாஸ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்..

அவர் பேசும் போது, இந்த தனித்துவமான முயற்சி, மாணவர் கண்டுபிடிப்பாளர்களின் புத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இது. பங்கேற்பாளர்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பு, பணிச்சூழலியல் வடிவமைப்பு, சிந்தனை மற்றும் பிட்ச்சிங் திறன் ஆகியவற்றில் பயிற்சியளிக்கும்.

பங்கேற்பாளர்கள் பல்வேறு தயாரிப்பு வடிவமைப்பு முறைகளை ஆராய்வதற்கும், வடிவமைப்பு சிந்தனைக் கருத்துகளை வளர்ப்பதற்கும் மற்றும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தொழில்முனைவோர் கல்விக்கான ஆதரவிற்காக புகழ்பெற்ற வாத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற சில பேச்சாளர்கள் மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் பயிற்சி அமர்வுகளை வழங்குவார்கள்.

முகாம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்நிறுவனத்தின் புத்தாக்க மையத்தைச் சேர்ந்த ரதி, நரேந்திரன், சாந்தினி மற்றும் டாக்டர் ரவீன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...