மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் டெம்போ வாகனம் கோவை கங்கா மையத்திற்கு எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் நன்கொடை

கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக கோவை எல்ஜி எக்ப்யூமெண்ட்ஸ் நிறுவனம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதுகுத்தண்டு காயம் அடைந்தவர்களுக்கு 41 லட்ச ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் மற்றும் லிப்ட் வசதியுடன் கூடிய போர்ஸ் டெம்போ வாகனத்தை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு நன்கொடையாக வழங்கியது.


கோவை: தமிழகத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதுகுத்தண்டு காயம் அடைந்தவர்கள் பயன்பெரும் வகையில் 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர், லிப்ட் வசதியுடன் கூடிய டெம்போ வாகனத்தை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையம் கடந்த 2014ம் ஆண்டு துவக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையாகும். மேலும் இது முதுகுத் தண்டுவடம் பாதித்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது. இந்த மையம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ளது.



இது முதுகுத் தண்டுவடம் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு அது தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இங்கு நாளொன்று 15 வெளிப்புற நோயாளிகளுக்கும் 36 உள்புற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் உள்ளது. கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக கோவை எல்ஜி எக்ப்யூமெண்ட்ஸ் நிறுவனம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதுகுத்தண்டு காயம் அடைந்தவர்களுக்கு 41 லட்ச ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் மற்றும் லிப்ட் வசதியுடன் கூடிய போர்ஸ் டெம்போ வாகனத்தை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

தமிழகத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் வாகனமாக இது உள்ளது. இது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து மறுவாழ்வு மையத்திற்கும், அவர்களது வசிப்பிடத்திலிருந்து மறுவாழ்வு மையத்திற்கும், பிசியோதெரபி மற்றும் இதர சேவைகளை மேற்கொள்வதற்கும், நோயாளியை மருத்துவமனையில் அல்லது அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட உள்ளது.



மேலும் இந்த வாகனம் நோயாளிகளின் வீட்டில் இருந்து அவர்களை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மேலும், சமூக-பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சியைப் பெறுவதற்கு தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட உள்ளது.

முதுகுத்தண்டில் காயம் அடைந்த நோயாளிகளை பாதுகாப்பான முறையில் மறுவாழ்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அவர்களுக்கு ஏற்ப இந்த வாகனம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் செல்லும் நோயாளிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் நோயாளிகள் லிப்டைப் பயன்படுத்தி வாகனத்தில் ஏறுவதற்கு இது ஒரு உள்ளமைக்கப்பட்ட லிப்டைக் கொண்டுள்ளது.

லிப்ட் பேட்டரி மற்றும் கையால் இயங்கும் இரண்டு வசதிகளையும் கொண்டுள்ளது. போக்குவரத்தின் போது, நோயாளிகளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, சக்கர நாற்காலிகளைக் கட்டுவதற்கு பாதுகாப்பு பெல்ட்களைப் பயன்படுத்தலாம். இது முதலுதவி பெட்டி, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 6 சக்கர நாற்காலிகள் மற்றும் ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரண்டு பராமரிப்பாளர்கள் செல்லும் வகையிலும் முழுமையான குளிர்சாதன வசதியைக் கொண்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...