மருதமலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோவிலில் துணை கமிஷனர் ஆய்வு

தேர்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19ம் தேதி தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 24ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 25ஆம் தேதி, திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. இதனையடுத்து, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், மாநகர போலீசார் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் ஆகியோர் நேற்று (ஜன.21) நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்விற்கு பின், பக்தர்கள், மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து கோவிலுக்கு மேலே செல்ல, பழைய படிக்கட்டு பாதையிலும், கோவிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள், ராஜகோபுரத்தின் வழியாக கீழே இறங்கவும், பக்தர்கள் வரிசையில் நின்று பஸ் ஏற தேவையான வசதிகளையும் ஏற்படுத்த அறிவுறுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...