ஈச்சனாரியில் ரத்தினம் குழுமம் அமைத்துள்ள அடல் இன்குபேஷன் சென்டரில் புதிய ஆய்வகம் திறப்பு விழா!

ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் குழுமத்தின் அடல் இன்குபேஷன் சென்டரில் புனையமைப்பு ஆய்வகம் திறப்புக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு முரளிதரன் பங்கேற்றார்.


கோவை: ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் குழுமத்தின் அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புனையமைப்பு ஆய்வகத்தை (ஃபேப் லேப்) இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த ஆய்வகம் இளம் தொழில் முனைவோர்களுக்கு ஆய்வு திறனை ஊக்குவித்து, ஐ ஓ டி சாதனங்கள், முப்பரிமாண அச்சுப்பொறிகள் போன்ற முன்னோடி தொழில்நுட்பங்களை வழங்குகிறது.

இந்த நிகழ்வில், பிறவியிலேயே காது கேளாதோர்களுக்கான கருவிகளை தயாரிக்கும் ஸ்டார்ட்அப் பேக்யார்ட் கிரியேடர்ஸ் நிறுவனர்கள் ராமன், லட்சுமணன், சூரிய மின் உற்பத்தித் தளங்களில் உபகரணங்களை தூய்மைப்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் சொலேவியோ இணை நிறுவனர் பிரசாந்த், மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் கருவிகளை உருவாக்கும் வட்டளோ மின்சுற்றுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனர் அமிர்தேஷ் மற்றும் கழிவு மேலாண்மை சார்ந்து செயல்படும் செர்க்கிள் எக்ஸ்-ன் நிறுவனர்கள் விஷ்ணு வரதன் மற்றும் திவ்யா ஷெட்டி அவர்களிடம் செர்க்கிள் எக்ஸ் பற்றிய கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் அடல் இன்குபேஷன் சென்டரின் தலைவர் டாக்டர் மதன் ஏ செந்தில் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் நாகராஜ் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, இந்த ஆய்வகத்தின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த ஆய்வகம் இளம் தொழில் முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளை தருவதோடு, தொழில்நுட்ப நவீனத்துவத்தின் முன்னோடிகள் என்ற நிலையையும் உயர்த்தும்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...