கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.


கோவை: வால்பாறை அருகே 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.



விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள், ராணுவ அதிகாரிகள், தனியார் மற்றும் அரசுத்துறை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொலைத் தொடர்பு துறை பணியாளர்கள், அஞ்சல் துறை அலுவலர்கள், மத்திய மாநில வரித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், தனியார் துறை நிறுவனம் மேலாளர்கள், வணிகர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், இந்நாள் ஆசிரியர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.



இவ்விழாவில் கருமலை பள்ளியின் புகை படத்தை அஞ்சல் துறையில் தாபல் தலையாக வெளியிட்டனர். இதை முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களிடம் வழங்கினர்.

விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் சிரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் முதலானவைகள் நடைபெற்று, ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா குழு உறுப்பினர்கள் தமிழ்வேந்தன், அன்புசேகர், மாதவன், தெய்வானை, ராஜமார்த்தாண்டன், மகாராஜா, அசோக் குமார், சூசி, ராமதாஸ், பரமசிவம், பிரபு, செந்தில், அன்புராஜ் ஆகியோர்கள் விழாவினை நடத்தினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...