கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.


கோவை: வால்பாறை அருகே 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.



விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள், ராணுவ அதிகாரிகள், தனியார் மற்றும் அரசுத்துறை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொலைத் தொடர்பு துறை பணியாளர்கள், அஞ்சல் துறை அலுவலர்கள், மத்திய மாநில வரித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், தனியார் துறை நிறுவனம் மேலாளர்கள், வணிகர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், இந்நாள் ஆசிரியர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.



இவ்விழாவில் கருமலை பள்ளியின் புகை படத்தை அஞ்சல் துறையில் தாபல் தலையாக வெளியிட்டனர். இதை முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களிடம் வழங்கினர்.

விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் சிரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் முதலானவைகள் நடைபெற்று, ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா குழு உறுப்பினர்கள் தமிழ்வேந்தன், அன்புசேகர், மாதவன், தெய்வானை, ராஜமார்த்தாண்டன், மகாராஜா, அசோக் குமார், சூசி, ராமதாஸ், பரமசிவம், பிரபு, செந்தில், அன்புராஜ் ஆகியோர்கள் விழாவினை நடத்தினர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...