காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் எம்ஜிஆரின் திருவுருவப்படங்களுக்கு நிர்வாகிகள் மலர்த்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும், புரட்சித்தலைவரும் எம்ஜிஆரின் 107 பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழா நகர கழக செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. காங்கேயம் நகர கழகம் சார்பில் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் நகர கழக நிர்வாகிகளுடன் இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் திருவுருவப்படங்களுக்கு மலர்த்தூவி மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக புரட்சித்தலைவி பேரவை மாநில துணைச்செயலாளர் ஆற்றல் அசோக்குமார், மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.பி.துரைசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் எஸ்.செல்வகுமார், நகர கழக அவைத்தலைவர் கே.கே.பழனிச்சாமி, நகர துணை செயலாளர் ஏ.ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...