காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் எம்ஜிஆரின் திருவுருவப்படங்களுக்கு நிர்வாகிகள் மலர்த்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும், புரட்சித்தலைவரும் எம்ஜிஆரின் 107 பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழா நகர கழக செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. காங்கேயம் நகர கழகம் சார்பில் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் நகர கழக நிர்வாகிகளுடன் இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் திருவுருவப்படங்களுக்கு மலர்த்தூவி மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக புரட்சித்தலைவி பேரவை மாநில துணைச்செயலாளர் ஆற்றல் அசோக்குமார், மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.பி.துரைசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் எஸ்.செல்வகுமார், நகர கழக அவைத்தலைவர் கே.கே.பழனிச்சாமி, நகர துணை செயலாளர் ஏ.ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...