பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால் இனி சீல் தான் - கோவை மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

கடந்த 2 ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12 லட்சத்து, 81 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2022 ஜூலை 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிமாநிலங்களில் இருந்து கோவைக்குள் நுழையும் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வியாபாரிகள் டோர் டெலிவரி' செய்கின்றனர்.

மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரமாகும், 1,250 டன் வரையிலான குப்பையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் தென்படுவதே இதற்கு சாட்சி. குறிப்பாக, குளக்கரைகள், நீர் வழித்தடங்களில் இது குவிந்து காணப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பொருட்களை தடுக்க, மாநகராட்சி சுகாதார பிரிவினர் சோதனைகள் நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. கடந்தாண்டு மட்டும், 10 ஆயிரத்து 957 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.24 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12 லட்சத்து, 81 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட டவுன்ஹால், பெரியகடை வீதி, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் துணிக்கடை, மொபைல் போன் கடை, ஓட்டல்கள் அதிகம் உள்ளதால் அதிகபட்ச பறிமுதல் இங்குதான் நடக்கிறது.இதன் புழக்கத்தை கட்டுப்படுத்த லட்சங்களில் அபராதம், 'சீல்' வைப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் இதுகுறித்து கேட்டபோது,'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த, அதிக அபராதம் வசூலிப்பதுடன், வரும் காலங்களில் கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள் உள்ளிட்டவற்றை சீல் வைக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...