பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால் இனி சீல் தான் - கோவை மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

கடந்த 2 ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12 லட்சத்து, 81 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2022 ஜூலை 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிமாநிலங்களில் இருந்து கோவைக்குள் நுழையும் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வியாபாரிகள் டோர் டெலிவரி' செய்கின்றனர்.

மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரமாகும், 1,250 டன் வரையிலான குப்பையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் தென்படுவதே இதற்கு சாட்சி. குறிப்பாக, குளக்கரைகள், நீர் வழித்தடங்களில் இது குவிந்து காணப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பொருட்களை தடுக்க, மாநகராட்சி சுகாதார பிரிவினர் சோதனைகள் நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. கடந்தாண்டு மட்டும், 10 ஆயிரத்து 957 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.24 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12 லட்சத்து, 81 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட டவுன்ஹால், பெரியகடை வீதி, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் துணிக்கடை, மொபைல் போன் கடை, ஓட்டல்கள் அதிகம் உள்ளதால் அதிகபட்ச பறிமுதல் இங்குதான் நடக்கிறது.இதன் புழக்கத்தை கட்டுப்படுத்த லட்சங்களில் அபராதம், 'சீல்' வைப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் இதுகுறித்து கேட்டபோது,'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த, அதிக அபராதம் வசூலிப்பதுடன், வரும் காலங்களில் கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள் உள்ளிட்டவற்றை சீல் வைக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...