பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கொண்டாட்டம்

யானைப்பொங்கல் விழாவில், மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர்.பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழைப்பழம், கொள்ளு, ராகி, அரிசி சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் இந்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்தாண்டு டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் யானைகளை குழிப்பாட்டி, பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டு முன்னதாக அங்குள்ள விநாயகரை யானைகள் தும்பிக்கியை தூக்கி மண்டியிட்டு வணங்கியது.



பின்பு மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர்.



பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழைப்பழம், கொள்ளு, ராகி, அரிசி சாதம் ஆகியவை ஒவ்வொரு யானைக்கும் வழங்கப்பட்டது.



இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.



மேலும் சுற்றுலா பயணிகள் கூறுகையில் வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம், ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், இங்கு ஒரே இடத்தில் 26க்கும் மேற்பட்ட யானைகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...