கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை இருசக்கர வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் அயோத்தி ராமர் கோவில் செல்ல அனுமதி கொடுப்பதில்லை என கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவர் இந்துஜா காஞ்சி கேள்வி எழுப்பினார்.


கோவை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள இந்துஜா காஞ்சி என்பவர் இருசக்கர வாகனத்தில் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ராமர் கோவில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள இருந்தார்.



இந்த நிலையில் கோவில் முன்பாக நின்று கொண்டிருந்த காவல்துறை இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்துஜா காஞ்சி கூறும் பொழுது கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் எங்களுக்கு கொடுப்பதில்லை என கேள்வி எழுப்பினார்.



இந்த பிரச்சனையில், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். அனுமதி கடிதம் கொடுத்தவுடன் பரிசீலனை செய்யப்படும் எனவும், பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...