கோவையில் உள்ள பார்க் கல்வி குழுமத்தில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கும்மி போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை தான். கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்விக் குழுமத்தின் வளாகத்தில் ஜனவரி 12 அன்று பொங்கல் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



2000 மாணவர்கள் மற்றும் 300 ஆசிரியர்கள் பங்குபெற்று கொண்டாடிய பெரிய திருவிழாவாக இருந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து பொங்கல் வைத்து கடவுளை வணங்கினார்கள். நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கும்மி போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

உறியடித்தல், பம்பரம், துப்பாக்கி சுடுதல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டிய டாக்டர் அனுஷா ரவி அவர்கள், உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், தனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள் ஆகும். ஆகவே, விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்போம், இயற்கையை காப்போம் என்று அறிவுறுத்தினார்.



பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கெடுத்த அனைவருக்கும் அறுசுவையான பொங்கல் விருந்து விநியோகிக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...