பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு

சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொங்கல் பண்டிகை யொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேவல் சண்டைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சேவல் இல்லாமல் சென்று விவசாயிகள் சென்று சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க மனு அளித்தனர். மனித உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, விவசாயிகள் ஒன்றுமையுடன் விளையாட கூடிய சேவல் சண்டைக்கு அனுமதி வழங்காதது கண்டிக்கதக்கது. மேலும் கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும், தேங்காய்க்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...