பூமியை சுத்தமாக வைக்கக் கோரி கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: நிலத்தில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை குப்பைகளாக போடுவதால் நிலம் மாசடைந்து ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதனால் பூமியை பாதுகாக்கவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் முன்வந்து பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி சார்பில் பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.



மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதில் சில மாணவர்கள் முகத்தில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...