காங்கேயம் மற்றும் ஊதியூர் பகுதிகளில் ஒரேநாளில் நான்கு கோயில்களில் தங்க நகைகள் கொள்ளை

கொத்தனூரில் ஒரே காம்பவுண்டில் உள்ள இரண்டு கோயில்களின் முன்பக்க கதவில் உள்ள பூட்டை உடைத்தும், வலசு பகுதியில் உள்ள கோவிலின் கதவுகளை உடைத்தும் மர்ம நபர்கள் சாமியின் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே கொத்தனூரிலுள்ள மகா மாரியம்மன் கோவில் மற்றும் மாகாளியம்மன் கோவில் வளாகம், வலசு பாளையம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் ஆகிய‌ மூன்று கோவில்களின் உள்ள கதவின் பூட்டை உடைத்து சாமியின் தங்கமாங்கல்யம் -2, மாங்கல்ய பொட்டு -4 மொத்தம் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொத்தனூர் மற்றும் வலசு பாளையம் ஊர் பொதுமக்களுக்கு சொந்தமான மூன்று தனியார் கோவிகளில் நேற்று காலை சுமார் 6 மணி அளவில் கோவில் பூஜைகளை முடித்து பூட்டிவிட்டு இன்று காலை கோவிலுக்கு அந்தந்த கோவிலின் பூசாரிகள் சிதம்பரம், லோகநாதன் ஆகியோர் காலை பூஜைக்காக கோவிலுக்கு வந்துள்ளனர்.



அப்பொழுது கொத்தனூரில் ஒரே காம்பவுண்டில் உள்ள இரண்டு கோயில்களின் முன்பக்க கதவில் உள்ள பூட்டை உடைத்தும், வலசு பகுதியில் உள்ள கோவிலின் கதவுகளை உடைத்தும் அடையாளம் தெரியாத நபர்கள் கோவில் சாமியின் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கண்டுள்ளனர்.



இதனை அடுத்து அந்தந்த கோவிலுக்கு சொந்தமான ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்களும் கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். பின்னர் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.‌



அவர்கள் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காங்கேயம் வீரணம்பாளையம் ஊராட்சி பூவாநல்லூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மற்றும் பூவாநல்லூர் காலனியில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய கோவிலின் பூட்டை உடைத்து மாங்கல்ய பொட்டு மற்றும் கோவில் முன் உள்ள உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுள்ளனர். காங்கேயம் பகுதியில் உள்ள கோவில்களில் ஒரே நாளில் நன்கு இடத்தில் கொள்ளை போனது காங்கேயம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...