சரவணம்பட்டி கரட்டுமேட்டில் பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஊழியருக்கு பாஜக கோவை மாவட்ட தலைவர் கண்டனம்

கோவிலில் அன்னதான கூடத்தில் உணவு பரிமாற வந்த பாக்கியலட்சுமி மற்றும் ரத்தினம் ஆகிய இரு பெண் ஊழியர்கள், பக்தர்களுக்கு சரிவர உணவு பரிமாறவில்லை என்றும், பக்தர்கள் மீது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், அன்னதான கூடத்தில், பக்தர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஹிந்து அறநிலையத்துறை ஊழியரின் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் அந்தப் பெண் ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் மாவட்ட பாஜக வலியுறுத்துகிறது.

ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோயிலில், தமிழக அரசின் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற பக்தர்களை, அன்னதானம் சாப்பிட வருமாறு கோயில் ஊழியர்கள் அழைத்துள்ளனர். அன்னதான கூடத்தில் உணவு பரிமாற வந்த பாக்கியலட்சுமி மற்றும் ரத்தினம் ஆகிய இரு பெண் ஊழியர்கள், பக்தர்களுக்கு சரிவர உணவு பரிமாறவில்லை என்றும், பக்தர்கள் மீது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அன்னதானத்தில் அமர்ந்திருந்த இரு பெண் பக்தர்கள் இலையில் சாப்பாடு போடும்படி கேட்டுக் கொண்டே இருந்தும், அதை காதில் கூட வாங்காமல் இந்த இரு பெண் ஊழியர்கள் சென்றுள்ளனர்.. ஒரு குழந்தை மறு சோறு போடுமாறு கேட்டபோது, அதெல்லாம் போட முடியாது எழுந்து போ என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதை தட்டி கேட்ட பக்தர்களிடம், தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகித்ததுடன், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது தேவையென்றால் உண்ணுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று கேவலமாக பேசி உள்ளனர்.

அன்னதானத் திட்டத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த பக்தர்கள், பெண் ஊழியர்களின் கேவலமான பேச்சால் உணவை அருந்தாமல் பாதியிலேயே எழுந்து சென்றுள்ளனர். கோயில்களில் வரும் வருமானத்தில், பக்தர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தில் இது போன்ற திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஹிந்து அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவிய போதும், சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும், இன்னும் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஹிந்து அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதை வன்மையாக கண்டிக்கும் கோவை மாநகர பாஜக, பக்தர்களிடம் கேவலமாக நடந்த அந்த ஊழியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...