உடுமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும், பி.ஏ.பி பகிர்மான கால்வாய்கள் கடை மடை வரை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மேற்கு மாவட்டம் உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.



நிகழ்வில் மாநில உழவர் பேரியக்கம் துணைச் செயலாளர் பொன்ரமேஷ் கலந்துகொண்டு சிறப்பு ஊரை ஆற்றினார். உடுமலை மடத்துக்குளம் பகுதியில் மும்முனை மின்சாரம் இல்லாததால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து வருவதால் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் மற்றும் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும், பி.ஏ.பி பகிர்மான கால்வாய்கள் கடை மடை வரை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும், தனியார் உரக்கடைகளில் வாங்கபடும் விதைகள் முளைப்புத் திறன் இல்லாமல் இருப்பதால் விதை சான்று அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட உழவர் பேரியக்கம் தலைவர் திருமுருகன், ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், பாமக நிர்வாகிகள் சரவணன், சவுந்தர்ராஜ், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...