கரைப்புதூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் - கணினிகள் வேலை செய்யாததால் மக்கள் அவதி

மக்களுடன் முதல்வர் முகாமில், சில துறைகளுக்கு வெறும் நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்களில் கமிஷன் மற்றும் லஞ்சங்களை தவிர்க்கும் வகையில் இந்த முகாம் போடப்பட்டுள்ள நிலையில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றது.

இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் மக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.



புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வர்த்தக உரிமம், குடிநீர் இணைப்பு, பிறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பொருளாதார குற்றங்கள், நில அபகரிப்பு மோசடி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், கல்வி உதவித்தொகை, தொழில் பயிற்சி, நல வாரியங்களின் உறுப்பினர் பதிவு, உதவித்தொகை பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவி திட்டம், கல்வி உதவித்தொகை, தாட்கோ கடன் உதவிகள், மகளிர் சுய உதவிக் குழு, கடன் உதவிகள் போன்ற பல்வேறு மனுக்களை கரைப்புதூர் ஊராட்சி மக்கள் மனுவாக அளிக்க வந்தனர்.



இந்நிலையில் மனுக்களை பதிவு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சில கணினிகள் பழுதடைந்ததால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.



நீண்ட நேரம் சிரமத்திற்கு பின் அதிகாரிகள் கனிணிகளை சரி செய்தனர்.



மேலும் சில துறைகளுக்கு வெறும் நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்களில் கமிஷன் மற்றும் லஞ்சங்களை தவிர்க்கும் வகையில் இந்த முகாம் போடப்பட்டுள்ள நிலையில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...