பல்லடம் அருகே மாதப்பூர் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழா

மண்டல பூஜை விழாவில் வேளராசி கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த கதையினை பாடலாக பாடி ஒரே சீருடையில் பெண்கள் கும்மி நடனம் ஆடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் மற்றும் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.



19ஆம் நாளான இன்று ப.வடுகபாளையத்தை சேர்ந்த வைகோ பாலு-தனமணி குடும்பத்தார் மற்றும் லோகநாதன்- மாலதி குடும்பத்தாரின் ஏற்பாட்டில் மண்டல பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு மகிமாலீஸ்வரர் மற்றும் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



விழாவின் தொடர்ச்சியாக வேளராசி கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த கதையினை பாடலாக பாடி ஒரே சீருடையில் பெண்கள் கும்மி நடனம் ஆடினர்.



இதன் தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...