பொள்ளாச்சி ராஜாமில் சாலையில் உள்ள ஒரு பகுதிக்கு விஜயகாந்தின் பெயர் சூட்ட கோரிக்கை

தேமுதிக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், த.மா.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மறைவிற்கு தமிழகம் முழுவதும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் விஜயகாந்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் தேமுதிக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், த.மா.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர் விஜயகாந்த் மக்களுக்கு செய்த பல்வேறு சேவைகள், ஏழை எளிய மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், திரைத்துறையில் அவர் ஆற்றிய சேவைகள் குறித்து புகழாரம் சூட்டி பேசினர்.



இதில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகன் அளித்த பேட்டியின் போது., விஜயகாந்த் திரைத்துறையில் பணியாற்றி காலங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். இதை நினைவு கூறும் வகையில் ராஜா மில் சாலையில் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதி அருகே உள்ள ஒரு பகுதிக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும்,நகராட்சிக்கும் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...