பொள்ளாச்சி ராஜாமில் சாலையில் உள்ள ஒரு பகுதிக்கு விஜயகாந்தின் பெயர் சூட்ட கோரிக்கை

தேமுதிக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், த.மா.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மறைவிற்கு தமிழகம் முழுவதும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் விஜயகாந்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் தேமுதிக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், த.மா.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர் விஜயகாந்த் மக்களுக்கு செய்த பல்வேறு சேவைகள், ஏழை எளிய மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், திரைத்துறையில் அவர் ஆற்றிய சேவைகள் குறித்து புகழாரம் சூட்டி பேசினர்.



இதில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகன் அளித்த பேட்டியின் போது., விஜயகாந்த் திரைத்துறையில் பணியாற்றி காலங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். இதை நினைவு கூறும் வகையில் ராஜா மில் சாலையில் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதி அருகே உள்ள ஒரு பகுதிக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும்,நகராட்சிக்கும் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...