மூலனூரில் அரசுப்பள்ளி மற்றும் கோவில் புனரமைக்கப்பட்டு அரசிடம் ஒப்படைப்பு

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு அமைச்சர் கயல்விழி நன்றி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மூலனூர் உள்ள ஓலபாளையம் அரசு பள்ளி மற்றும் குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்க பட்டு அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஓலபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அருள்மிகு குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்கும் பணி ஆறுமுகம் அறக்கட்டளை சார்பில் அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் நிறுவனம் 35, லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அரசு பள்ளி மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில், நடைபெற்றது.

இந்நிகழ்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில், மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தையும் அரசு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அனிதா டெக்ஸ்டைல் நிறுவனங்களைப் போன்று தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து இதுபோன்ற மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.



இதுபோன்ற மக்கள் நலத்தட்ட பணிகளை அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்களும் முன் வருவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...