திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

விண்ணப்பதாரா்கள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநங்கையா்கள் சொந்த முயற்சியில் படித்து தனித்திறமையைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவா்களில் ஒருவருக்கு முன்மாதிரி விருது திருநங்கையா் தினமான 2024 ஏப்ரல் 15 -ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

இவ்விருது வழங்குவதற்குத் தகுதியான திருநங்கையா்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூ.1 லட்சம் காசோலை, சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். விண்ணப்பதாரா்கள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

விண்ணப்பதாரா்கள் உரிய கருத்துருக்களுடன் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை ஜனவரி 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலமாகவும், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலும் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...