கோவையில் தார்சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தார் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39க்குட்பட்ட கீர்த்தி நகர், அஜ்ஜனூர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 630 மீட்டர் தொலைவிற்கு ரூ.41.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.38-க்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 415 மீட்டர் தொலைவிற்கு ரூ.27.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும்,



வார்டு எண்.41க்குட்பட்ட சென்னிமலை ஆண்டவர் நகர் பி.என்.புதூரில் (NSMT 2023-24 Package-13) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 341 மீட்டர் தொலைவிற்கு ரூ.7.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், வார்டு எண்.42க்குட்பட்ட அம்பேத்கர் நகரில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், அப்பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு, வார்டு எண்.42க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் பிரவின்ராஜ், லட்சுமி, சாந்தி, உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி பொறியாளர்கள் ஐசக் ஆர்தர், விமலா, சவிதா, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...