கோவையில் தார்சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தார் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39க்குட்பட்ட கீர்த்தி நகர், அஜ்ஜனூர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 630 மீட்டர் தொலைவிற்கு ரூ.41.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.38-க்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 415 மீட்டர் தொலைவிற்கு ரூ.27.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும்,



வார்டு எண்.41க்குட்பட்ட சென்னிமலை ஆண்டவர் நகர் பி.என்.புதூரில் (NSMT 2023-24 Package-13) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 341 மீட்டர் தொலைவிற்கு ரூ.7.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், வார்டு எண்.42க்குட்பட்ட அம்பேத்கர் நகரில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், அப்பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு, வார்டு எண்.42க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் பிரவின்ராஜ், லட்சுமி, சாந்தி, உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி பொறியாளர்கள் ஐசக் ஆர்தர், விமலா, சவிதா, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...