தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை - தமிழக அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை நடைபெறும் நிலையில் தமிழக அரசை கண்டித்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து குறிப்பாக ஒரு சமூகத்தினரை படுகொலை செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து படுகொலை திமுக ஆட்சியில் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டினர்.



தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுத்து எவ்வாறு கொலைகள் நடக்கிறது என்று ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...