தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை - தமிழக அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை நடைபெறும் நிலையில் தமிழக அரசை கண்டித்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து குறிப்பாக ஒரு சமூகத்தினரை படுகொலை செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து படுகொலை திமுக ஆட்சியில் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டினர்.



தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுத்து எவ்வாறு கொலைகள் நடக்கிறது என்று ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...