மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் கயல்விழி அஞ்சலி

ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மனக்கடவு ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.



அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.



இறந்தவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உயிர் இழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...