மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் கயல்விழி அஞ்சலி

ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மனக்கடவு ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.



அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.



இறந்தவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உயிர் இழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...