எம்.எஸ்.எஸ் நிறுவனம் சேவை குறைபாடு - இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு 2022ம் ஆண்டு, பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் அனுப்பிய டயரி மெஷினை டெலிவரி செய்யாமல் எம்.எஸ்.எஸ் நிறுவனம் திருப்பி அனுப்பியது கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.


கோவை: பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, ஆவாரம்பாளையம் ரோட்டில், ராஜசேகர் என்பவர் பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சேலம் ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு, 2022, செப். 1ல், 10,030 ரூபாய் மதிப்புள்ள, டயரி மெஷின் ஒன்றை, எம்.எஸ்.எஸ். என்ற பார்சல் சர்வீஸ் வாயிலாக, அனுப்பி வைத்தார். ஆனால், வாடிக்கையாளருக்கு டயரி மெஷின் டெலிவரி செய்யப்படாமல் திரும்பி வந்தது.

இது பற்றி கேட்ட போது, 'முகவரியில் ஆள் இல்லை' என்று கூறினர். ஆனால், குறிப்பிட்ட முகவரிக்கு, பார்சலை கொண்டு செல்லாமல், வேறு முகவரிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜசேகர் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'மனுதாரர் அனுப்பிய முகவரிக்கு, பார்சலை எடுத்து செல்லாமல், எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாருக்கு மொத்தம் 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...