உடுமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் - திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு

காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை மழைநீர் சூழ்ந்தது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதியில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. 



இதனால் திருமூர்த்தி மலை அடிவாரம் பகுதியில் உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பூஜைகள் நிறுத்தப்பட்டன.



மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...